Tuesday, December 18, 2012

இந்த உலகம் அழிந்தால்தான் என்ன??


மாயன் காலண்டர் டிசம்பர் 21 ஆம் தேதியோடு நிறைவுற்று உலகை பயமுறுத்திக் கொண்டிருக்க, உலகம் ஏன் அழியக்கூடாது?? 

* லாண்டரிக்கு போட்ட துணியெல்லாம் வர்ற 26 ஆம் தேதிதான் டெலிவரி 

புதுசா ஹமாம் சோப்பும், பேட்டா செருப்பும் வாங்கி ஒரு வாரம் கூட ஆகல 

* எதுத்த வீட்ல தெத்துப்பல் பானுமதி  என்னை திரும்பி பார்க்க ஆரம்பிச்சு 4 நாள்தான் ஆகுது 

* 26 தான் என்னோட சம்பள தேதி 

* எப்போது வேண்டுமானாலும் என்னை கடித்துவிடும் அபாயத்திலிருந்த எங்கள் தெரு நாய்க்கு ஒரு வாரமாய் பிஸ்கட் வாங்கிப் போட்டு இப்போதான் கரக்ட் செஞ்சிருக்கேன் 

* காஃபி பொடி தீர்ந்து போக குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் 

* புது வீடு மாற அட்வான்ஸ் கொடுத்துட்டேன் திருப்பிக் கேட்டா வெலக்குமாத்துலையெ அடிப்பான் 

* புதிதாக கவிதை எழுதத் தொடங்கி இருக்கிறேன் அது புத்தகமாகி வெளிவரும் வரை நீங்கள் இருக்கணுமே (எப்படியும் படித்த பின் இல்லாமல் போய் விடுவீர்கள்)

* புதிதாக எங்க ஊர்ல ரோடு போட்டிருக்கிறார்கள், ரோடு அழிய இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகலாம்

* மனைவி ஊருக்கு போயிருக்கிறாள் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் 

* கடல் படம் இன்னும் ரலீஸ் ஆகல தீவிர ராதா ரசிகனான நான், ராதாவோட ரெண்டாவது பொன்னையும் பாத்துட்டா ஜென்ம சாபல்யம் அடைந்சுடுவேன் 

* இன்னும் தேமுதிகவின் அனைத்து எம் எல் ஏக்களும் அம்மா கூட நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை 

* சென்னையின் மெட்ரோ ட்ரைன் ப்ராஜெக்ட் இன்னும் முடியல 

* நயன்தாராவோட அடுத்த காதலன் யாருன்னு இன்னும் தெளிவா தெரியல 

* இன்னும் ஒருவாட்டி கூட சாகல...

* ரஜினியோட அடுத்த படத்தோட ஹீரோயின் எந்த ஹாஸ்பிட்டல்ல பிறக்கும்னு தெரியல 

* பிரபுவோட புரட்சி போராட்டம் இன்னும் மிச்சம் இருக்கு 

இதே போன்ற காரணங்கள் நிறையவே இருக்கின்றன ஏன் உலகம் அழியக்கூடாது என்பதற்கு, அழிந்தால்தால்தான் என்ன?? என்ற கேள்விக்கு தவணை பணம், கொசுத் தொல்லை, பவர் கட் போன்ற சின்ன சின்ன காரணங்கள் இருந்தாலும், எனக்கு இருக்கும் ஒரே காரணம் மச்சினிச்சிக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி விட்டது 

இந்த உலகம் அழிந்தால்தான் என்ன??





Tuesday, December 11, 2012

ரஜினி! ரஜினி!! ரஜினி!!!


இன்னும் ரசிகர்களுக்கு கல்யாண விருந்து தராமலிருப்பது, ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சனையில் அடித்த பல்டி, கர்நாடக்காவில் சொத்து, அரசியல் கண்ணாமூச்சி, இது போன்ற ரஜினி மீதான விமர்சனங்கள் எண்ணிலடங்காதவை இதோடு சேர்த்து இதே போன்ற விமர்சனகள்  அவர் மேல் எனக்கும் உண்டு. அதை எழுதுவதற்கு, இன்று அதற்கான நாளுமல்ல அவசியமும் அல்ல. ரஜினியை ரசிப்பவர்கள் மேலே படியுங்கள், ரஜினியை ரசிக்காதவர்கள் நிச்சியம் மேலே படியிங்கள்.....

ரஜினியினால் தமிழ்நாட்டின் ஒரு பகுதியை தன போல் மாற்ற முடிகிறது என்பதை யாரலும் மறுக்கவியலாது. உதாரணமாக, ரஜினி கிழிந்த பேன்ட் போட்டு நடித்தால் தமிழ் நாடே கிழிந்த துணியை ஃபேஷன் ஆக்கிவிடும், ரஜினி ஹேர் கலரிங் செய்தால், கருமையான முடி அவமானமாக கருதப்பட்டுவிடும். ரஜினியினால் மட்டுமே மேலே கோட்டும் கீழே கிழிந்த பேண்ட்டும் அணிந்து அதையும் ரசிக்க வைக்க முடியும். ரஜினி திரையில் செய்யும் கோமாளித்தனங்கள் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன் உண்மையில் கொண்டாடப்பட்டது. ரஜினி வாயாலேயே சொன்ன ரஜினிக்கு பிடித்த படம், "முள்ளும் மலரும்" அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த 'காளி' என்ற கதாபாத்திரத்த்தை ரஜினி செய்த பின் ரஜினியை தவிர்த்து வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் பொருத்தி பார்க்கவே முடியாது ஏன் அப்படி செய்வது பாவமும் கூட. ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் ரஜினி எதார்த்தமாக வெளிப்பட்டு இருப்பார்... எங்கேயோ கேட்ட குரல் படத்தில் அமைதியாக பேசி அமைதியாகவே கோபப்படும் ரஜினி முற்றிலும் வேறொரு அனுபவம். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி முளுத்திறனும் வெளிப்படுத்தக் கூடியவர்தான் என்றாலும் வர்த்தகத்தால் மட்டுமே சூழ்ந்த இவ்வுலகம் ரஜினியை ஒரே மாதிரியான காதாபாத்திரத்தையே திரும்ப திரும்ப செய்ய வைத்தது. ரஜினி செய்யவியலாத அல்லது செய்யாமல் தவிர்த்த கதாபாத்திரங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

ரஜினி முதன்முதலில் தயாரித்த மாவீரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியின் கை கால்கள் கட்டப்பட்டு இருக்கும், போதாக்குறைக்கு சவுக்கால் அடித்து சட்டையை வேறு கிழித்து விட்டிருப்பார்கள். வெறும் தலையை மட்டும் ஆட்டி முடியை சிலுப்பி கண்களை குறுக்கி நம் பார்வையை வேறெங்கும் செல்லவிடாமல் தன்பால் மட்டுமே ஈர்த்துக் கொள்ளும் ரஜினிக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாது ஈர்ப்பு சக்தி இருக்கிறதென்பதை மறுக்க முடியவில்லை

அந்த பாடலை காண இங்கே க்ளிக் செய்யவும் 

ஒரு ரஜினி ரசிகனாய் எனக்கு ரஜினியின் புதுக்கவிதை, குசேலன் மற்றும் எந்திரன் ஆகிய படங்கள் பிடிக்கவில்லை, அதிலும் எந்திரன் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை,  கதாநாயகியை வம்பிழுத்த ரவுடியை அடித்து நொறுக்காமல் பயந்தோடி பாடல் காட்சியில் பதுங்குவதும், கார்ட்டூன் படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்த க்ளைமேக்ஸ் காட்சிகளும் முற்றிலும் வெறுப்படைய செய்தன..... ரஜினி படமெனில், ரஜினி ஏதோ ஒரு துரோகத்தையோ, சவாலையோ எதிர்கொள்ள வேண்டும் பின்னாளில் துரோகியை பழி தீர்த்து சவாலை வென்று எதிரியை வீழ்த்தி படம் முடியும் நேரத்தில் சந்தோசமாக சிரிக்கும் ரஜினியுன் முகத்தை பார்த்தே பழக்கப்பட்டுவிட்டோம், ரஜினி பற்றி எழுத இன்னும் நிறையவே இருக்கிறது நேரம் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருப்பதால் இறுதியாக ஒன்றே ஒன்று என் மகள் ஆதிராவிற்கு வயது ஒன்று முடிந்து மூன்று மாதம் ஆகிறது அவளுக்கு ரஜினி பரிச்சியம் கிடையாது எந்த ஊடகத்திலும் பார்த்ததுமில்லை, ஆனால் எஜமான் படத்தில் ரஜினி தோளில் துண்டினை சுற்றி போடுவது போல் செய்து காட்டினால் கண் இமைக்காமல் பார்த்து கை தட்டி ரசித்து சிரிக்கிறாள் 

அதான் ரஜினி